மூவர்ணம் பூச எதிர்ப்பு

மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மணிகூண்டினை ‘தேசியக் கொடி மக்கள் இயக்கம்’ சார்பில் மூவர்ண நிறம் தீட்ட நகராட்சி அனுமதி பெறப்பட்டது. ஆனால் தற்போது முஸ்லீம்கள் இதனை எதிர்ப்பதால் மூவர்ணம் தீட்ட அனுமதிக்க முடியாது என்று நகராட்சி கூறியுள்ளது. இதற்கு அங்குள்ள பொதுமக்கள், தேசிய அமைப்புகள் என பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழகம் என்ன பாகிஸ்தானிலா உள்ளது? என கேட்டுள்ள இந்துமுன்னணி அமைப்பினர், இந்துமுன்னணி சார்பில் மூவர்ணம் தீட்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.