வலுக்கும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்கள்

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறை இப்போது மற்றொரு ஈரானிய பள்ளி மாணவியின் மரணத்திற்கு வழிவகுத்துள்ளது. அர்தாபில் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில், இஸ்லாமிய ஆட்சிக்கு ஆதரவான கீதத்தைப்பாட காவல்துறை மாணவர்களுக்கு கட்டளையிட்டது. இந்த கீதத்தை மாணவர்கள் பாட மறுத்ததால், ஈரானிய பாதுகாப்பு படையினர் மாணவ மாணவிகளை கடுமையாகத் தாக்கினர். இதனால், பல மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலால் மோசமாக காயமடைந்த 16 வயதான அர்சா பனாஹி என்ற மாணவி மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்த சிறுமி மரணம் அடைந்த செய்தி பரவியதையடுத்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.