மண் காக்க மற்றொரு பயணம்

‘மண் காப்போம்’ என்ற விழிப்புணர்வு இயக்கத்துக்காக உலகின் பல நாடுகளில் 100 நாட்கள் இருசக்கர பயணத்தை ஈஷா யோகா மைய நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ் மேற்கொண்டார். இந்த விழிப்புணர்வு பயணம் பெரும் வெற்றியை பெற்றது. இதன் மூலம், பல நாடுகள் பாரதத்தின் பல மாநிலங்கள் மண் வளத்தை காக்க உறுதி பூண்டன. இந்நிலையில் “மண் காப்போம் இயக்கத்தின் அடுத்த கட்டமாக நான்கு நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் எனது பயணத்தை துவங்க உள்ளேன். அடுத்த ஒன்றரை மாதத்தில், அமெரிக்கா, ஐரோப்பா, கரிபீயன் பகுதிகளில் 21 நாடுகளுக்கு பயணம் செய்து, அந்த நாடுகளின் தலைவர்கள், மண் வள பாதுகாப்புக்கு சட்டங்கள் இயற்ற வலியுறுத்த உள்ளேன்” என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.