தஞ்சையில் மற்றொரு மாணவி பலி

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பருத்தியப்பர் கோயில் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, ஒரத்தநாடு, லிட்டில் ரோஸ் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இரு நாட்களுக்கு முன் பள்ளியின் கணித ஆசிரியர் சசிகுமார், சக மாணவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் அந்த மாணவியை திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்து கொள்ளும் முன், பள்ளியில் படிக்கும் சில மாணவியருக்கு இதுகுறித்து வாட்ஸ்ஆப் தகவல் அனுப்பியுள்ளார். இதையடுத்து, மாணவியின் சித்தப்பா கொடுத்த புகாரின் அடிப்படையில், மாணவியை தற்கொலைக்கு துாண்டியதாக ஆசிரியர் சசிகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.