மற்றொரு மதவெறி படுகொலை

பா.ஜ.கவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்ட ஹிந்து மதத்தைச் சேர்ந்த தையல் கலைஞர் கன்னையா லால் என்பவரை, முஸ்லிம் பயங்கரவாதிகள் இருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பாரதம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதேபோல சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த மருத்துவரான உமேஷ் கோல்ஹே என்பவர் நுபுர் ஷரமாவுக்கு ஆதரவாக பதிவிட்டார் என்ற காரணத்திற்கா கடந்த ஜூன் 21 அன்று தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய அப்துல், சோயிப் கான், முடாசிர் அகமது ஷேக் இப்ராஹிம், ஷாருக் பதான் ஹிதாயத் கான் ஆகிய பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.