திருமாவளவனுக்கு அண்ணாமலை சவால்

சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த பா.ஜ.கவினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே மோதல் உண்டானது. பா.ஜ.க தொண்டர்கள் மீது கற்கள் மற்றும் கம்புகளை கொண்டுவி.சி.கவினர் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கான தற்காப்பு நோக்கில் பதிலுக்கு பா.ஜ.கவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதேபோல, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘திட்டமிட்டு ரவுடிகளை ஏவி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ள சனாதனக் கும்பலான பா.ஜ.கவினரைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டு. புரட்சியாளர் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைக்கு நேரெதிரான சனாதன கொள்கையைக் கொண்ட பா.ஜ.கவினருக்கு அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை. இந்த நாடக அரசியலை மக்களிடம்  அம்பலப்படுத்துவோம்’ என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘அண்ணல் அம்பேத்கரின் சித்தாந்த வாரிசாக பார.ஜ.க இன்று வாழ்ந்து காட்டி கொண்டிருக்கிறது. எத்தனை காலம் மக்களை உங்களுடைய பொய் புரட்டுகளை வைத்து ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்? எங்களுடைய தொண்டர்களை உங்கள் கட்சியினர் தாக்கியது எனக்கு மிகுந்த மன வேதனை அளித்தாலும் கூட, உங்களுடைய தொண்டர்கள் தவறான வழிகாட்டுதலின் பால் அதை செய்கின்றார்கள் என்றும் எனக்குத் தெரியும். எங்கள் தொண்டர்கள் கண்ணிலே எனக்கு பயம் தெரியவில்லை, நல்ல சமுதாயத்தை படைப்பதற்கான முயற்சி தெரிந்தது. நீங்கள் சொல்லும் நேரத்தில், சொல்லும் இடத்திலே தமிழக பா.ஜ.க சார்பாக அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை சித்தாந்தம் எப்படி பா.ஜ.கவின் இன்றியமையாத சித்தாந்தமாக மாறி இருக்கிறது? எப்படி பாரத பிரதமர் நரேந்திர மோடி, அவருடைய வாழ்க்கையை அண்ணல் அம்பேத்கர் வகுத்துக் கொடுத்த பாதையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று எடுத்துரைக்க நான் தயாராக வருகின்றேன். இடத்தையும் நேரத்தையும் நீங்கள் கூறுங்கள் என குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் சவாலை திருமாவளவன் துணிவாக ஏற்பாரா அல்லது வழக்கம்போல பதில் அளிக்காமல் கடந்து செல்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.