முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை 6 கேள்விகள்

‘முதல்வர் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்’ என்ற பெயரில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வீடியோ பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் எழுப்பியுள்ள கேள்விகளின் விபரம்: 1. ‘தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்து விட முடியாது’ என, கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார். இதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் தான். ‘டெல்டாக்காரன்’ என பாவித்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஏன் இதுவரை சிவகுமாரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை?

  1. கூட்டணி ஆயிற்றே என்ற பாசமா?
  2. இதை வைத்து பார்லிமென்ட், ‘சீட்’களுக்கு குதிரை பேரம் பேசலாம் என்ற நோக்கமா?
  3. மக்கள் எப்படி போனால் எனக்கென்ன என்ற அலட்சியமா?
  4. இல்லை… தான் ஒரு முதல்வர் என்பதையே மறந்து விட்டாரா?
  5. டெல்டாக்காரன் என, பெருமையாக சொல்லிவிட்டு, டெல்டா மக்களுக்கான உரிமைகள் பறிபோகும் போது வாய் மூடி இருப்பது நியாயம் தானா? இவ்வாறு அவர் கேள்விகள் எழுப்பியுள்ளார்.