பேருந்தை வழிமறித்து அராஜகம்

கரூரில் திருமாநிலையூர் – லைட் ஹவுஸ் கார்னர் இடையே உள்ள புதிய அமராவதி பாலத்தில் கோவையை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, போதை ஆசாமி ஒருவர் கையில் அரிவாளுடன் பேருந்தை வழிமறித்தார். ‘என் அரிவாளுக்கு பதில் சொல்லி விட்டு செல்,’ என்று கூறி விட்டு, ஓட்டுநரை வெட்ட முற்பட்டுள்ளார். அவரை சக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பொதுமக்கள் துரத்தியதால் அரிவாளுடன் ஓடிவிட்டார். ஆனால், அவருடன் வந்த மற்றொருவர் சிக்கிக்கொண்டார். இந்நிலையில், அங்கு வந்த நான்கு நபர்கள், நாங்கள் அப்படித்தான் காண்பிப்போம். அதற்கு எப்படி நீங்கள் அடிக்கலாம் என்று கூறி, அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை தாக்க முயற்சித்தனர். இப்படி பஞ்சாயத்து செய்ய வந்த நபர்கள் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படம் ஒட்டிய வாகனத்தில் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.