அராஜக கிறிஸ்தவ ஊர்வலம்

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகரில் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் முன்பாக நேற்று கிறித்தவர்கள் பிஷப் தலைமையில் ஒரு ஊர்வலத்தை குதிரை வண்டியில் வைத்து நடத்துவதாக இருந்தது. அதற்கான ‘கட் அவுட்டை’ கிறிஸ்தவர்கள் எவ்வித அனுமதியுமின்றி அத்துமீறி கோயில் வளாகத்தில் வைத்திருந்தனர். கோயில் ஊழியர்கள் கூட யாரும் அதை கேட்க முன்வரவில்லை. இதயறிந்த இந்து முன்னணி பொறுப்பாளர்கள், கட் அவுட்டை அகற்ற வைத்தனர். காவல்துறையின் அலட்சிய போக்கை கண்டித்ததுடன் ஊர்வலத்தையும் திருப்பியனுப்பினர்.