ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் கைது

செய்தியின் உண்மை தன்மையை சரிபார்க்கும் இணையதள நிறுவனமாக ‘ஆல்ட் நியூஸ்’ செயல்பட்டு வருகிறது. இந்த இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜூபைர். கடந்த 2020ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் விசாரணைக்காக முகமது ஜூபைர் டெல்லி காவல்துறையினரிடம் ஆஜரானார். ஆனால், இந்த வழக்கில் முகமது ஜூபைரை கைது செய்ய ஏற்கனவே, டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு பின் ஜூபைர் கடந்த 2018ம் ஆண்டு தனது டுவிட்டர் பக்கத்தில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் பதிவு செய்த சர்ச்சைக்குரிய கருத்தின் அடிப்படையில், அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018-ல் முகமது தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சைக்குரியை வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாலாஜிகிஜெய்ன் என்பவர் ஏற்கனவே காவல் துறையில் புகார் அளித்திருந்தார். கைது செய்யப்பட்ட முகமது ஜூபைர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முகமதுகாவல்துறை போலீசார் தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.