அல்ஸ்தாம் புதிய ஆலை

‘மேக் இன் இந்தியா’ மற்றும் மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரெஞ்சு பன்னாட்டு ரோலிங் ஸ்டாக் உற்பத்தியாளரான அல்ஸ்தாம் நிறுவனம், தமிழகத்தின் கோயம்புத்தூரில் அதன் புதிய உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலை. மேலும் இது பல்வேறு மதிப்புமிக்க தேசிய மற்றும் சர்வதேச திட்டங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும். இந்த கோவை பிரிவு தற்போது அல்ஸ்தாமின் பாரத பிரிவுக்கு மட்டுமில்லாமல் ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களில் உள்ள முக்கிய பிரிவுகளுக்கும் உதிரி பாகங்கள் தயாரித்து வழங்கும். இங்கு 10,000 நேரடி மற்றும் மறைமுக வேலைகள் கிடைக்கும்.