மேலும் ஒரு உள்நாட்டு தடுப்பூசி

ஹைதராபாத்தில் செயல்பட்டு வருகிற பயோலஜிக்கல்-இ லிமிட்டட் எனும் நிறுவனம் தயாரித்து வரும் கொரோனா தடுப்பு மருந்து வரும் ஆகஸ்டிற்கும் டிசம்பருக்கு இடையில் வெளியாகும். இந்த நிறுவனம் 30 கோடி டோஸ் தடுப்பு மருந்து வழங்க உள்ளது.இந்த தடுப்பூசி மூன்றாவது கட்ட பரிசோதனையை தற்போது நடத்தி வருகிறது. இந்நிறுவனத்திற்கு ரூ.1,500 கோடியை முன்பணமாக மத்திய அரசு வழங்கியுள்ளது.