விவசாய மானிய முறைகேடு

தமிழகத்தில் வேளாண்மை துறையில், விவசாயிகளிடம் விதைகள் கொள்முதல் முறைகேடு, போலி பெயர் பட்டியல், பூச்சி மருந்து, உரம் உரிமம் வழங்கியதில் விதிமீறல், சொட்டுநீர் பாசனக் கருவிகள் வாங்கியதில் ஊழல் என விவசாய மானிய திட்டங்களில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. இதனை விசாரணை செய்யக் கோரிய மனு மீது தமிழக தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர், இயக்குனர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், புகாருக்கு உரியவர்களை எதிர் மனுதாரராக சேர்க்க சொல்லி விசாரணையை ஆகஸ்ட் 17க்கு ஒத்தி வைத்தது.