ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கக்கூடாது

மதுரை, கன்னியாகுமரி மாவட்டம் குளத்தூர் பகுதியில் பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சட்ட ஒழுங்கு பிரச்சினை வரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவது அவர்களை ஊக்குவிக்கும் செயல் என்று கண்டித்தார். மேலும், குமரி மாவட்டம் பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அந்த அறிக்கையை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.