ம.பி அதிரடி அறிவிப்பு

கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதத்திற்கு ரூ 5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். அந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி,  இலவச ரேஷன் வழங்கப்படும். வேலை செய்ய விரும்பும் மக்களுக்கு அரசாங்கத்தின் உத்தரவாதத்தின் அடிப்படையில் மாநில அரசும் கடன்களை வழங்கும் என்று பல அதிரடி அறிவிப்புகளை மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.முன்னதாக, கொரோனா எழுச்சியைக் கட்டுப்படுத்த மே 15 வரை முழுமையான ஊரடங்கை மத்திய பிரதேச அரசு அறிவித்திருந்தது.