சாதிக்கும் அடல் புத்தாக்க திட்டம்

அடல் புத்தாக்க இயக்கத்தை நிதி ஆயோக் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தை 2023 மார்ச் மாதம் வரை நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களை ஏற்படுத்துதல், 101 அடல் இன்குபேஷன் மையங்கள் அமைத்தல், 50 அடல் சமுதாய புத்தாக்க மையங்களை உருவாக்குதல், 200 ஸ்டார்ட் அப்களுக்கு நிதியுதவி அளித்தல் ஆகியவைகளை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் பள்ளிகளில் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைப்பதற்காக ரூ. 20 லட்சம் வரை மானிய உதவி அளிக்கப்படுகிறது. அவ்வகையில் பாரதத்தில் தற்போது 10 ஆயிரம் இந்த ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,033, தமிழகத்தில் 975, உத்தரப் பிரதேசத்தில் 955 ஆய்வகங்கள் அமைந்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் பாரதத்தில் 51 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 6 ஸ்டார்ட் அப்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.