குவியும் புகார்கள்

மின்னகம் சேவை மையத்தில் கடந்த ஒரே வாரத்தில் 50 ஆயிரம் புகார்கள் குவிந்துள்ளன. தமிழகத்தில் மின்துறை சார்ந்த தகவல்கள், புகார்கள் தெரிவிக்க ‘மின்னகம்’ என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. சேவை மையத்திற்கென பிரத்யேகமான 9498794987 என்ற கைபேசி எண்ணையும் அறிமுகம் செய்துள்ளனர். தற்போதைய ஆட்சியில் ஏற்படும் மின்வெட்டு, மின்கட்டண உயர்வு குறித்து ஒரு வாரத்துக்குள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் மின்நுகர்வோரிடம் இருந்து வந்து குவிந்துள்ளன. மின்வெட்டுக்கு அணில்களே காரணம் என கூறும் மின்துறை அமைச்சர் புகார்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுப்பார் என்றும், தமிழகத்தை மீண்டும் மின்மிகை மாநிலமாக்க என்ன முயற்சிகள் எடுப்பார் என்றும் பொறுத்திருந்து பார்ப்போம் என நெட்டிசன்கள் வலைத் தளங்களில் விவாதிக்கின்றனர்.