ஏ.பி.ஏ.பி பொதுக்குழு

அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழக மாநில பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைப்பின் மாநிலத் தலைவராக பாஸ்கர், பொது செயலாளராக பழனிக்குமார் உட்பட இதர பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.