ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கைது

டெல்லி மற்றும் பஞ்சாபில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஆதரவுடன் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில், 4 பேரை டெல்லி காவல்துறையுடன் இணைந்து பஞ்சாப் காவல்துறையினர் டெல்லியின் புறநகர்ப் பகுதியில் கைது செய்தனர். இந்த நான்கு பேரில் ‘ஆம் ஆத்மி’ கட்சித் தலைவர்களில் ஒருவரான விபின் ஜாகர் என்பவரும் ஒருவர். இவர் 2017ல் ஆம் ஆத்மி கட்சி சார்பாக நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டவர். சுதந்திர தினத்தில் நாட்டில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தமுயன்ற இந்த நான்கு பேரும் தற்போது காவல்துறையால் ஐந்து நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.