மதரசா நடத்திவந்த பயங்கரவாதி

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ள, வங்கதேசத்தை சேர்ந்த முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான அன்சருல்லா பங்களா டீமுடன் (ABT) தொடர்புடைய 10 பேரை கைது செய்ததன் மூலம் ஒரு மிகப்பெரிய பயங்கரவாத தொகுப்பு முறியடித்ததாக அசாம் காவல்துறையினர் தெரிவித்தனர். சிறப்புப்பிரிவு ஏ.டி.ஜி.பி ஹிரேன் நாத்தின் அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், பார்பெட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு பயங்கரவாத தொகுப்பு முறியடிக்கப்பட்டது. பார்பெட்டா, மொய்ராபரி, மோரிகான் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சில முக்கிய குற்றச்சாட்டு ஆவணங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மொய்ராபரி பகுதியில் கைது செய்யப்பட்ட இந்த பயங்கரவாதிகளில் ஒருவர் மதரஸா ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்” என தெரிவித்தார்.