பொய் பிரச்சாரம் செய்யும் போதகர்

சென்னை அடுத்த குன்றத்தூரில் உள்ள சி.எஸ்.ஐ உயிர்ந்தெழுந்த மீட்பர் கிறிஸ்தவ சர்ச்சில் பிரார்த்தனை கூட்டத்தில் பேசிய பெண் போதகர் பியூலா செல்வராணி, தேவ செய்தி கொடுப்பதாகக்கூறி, பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசினார். பெண்களுக்கு குடும்பத்தில் பாதுகாப்பில்லை, பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பில்லை என பேச ஆரம்பித்த அவர், நாடார் சாதியின் பெயரை சொல்லி,அவர்களது கடைகளுக்கு பொருள் வாங்கச்செல்லும் சிறுமிகளிடம் பொருட்கள் கொடுக்கும் போது அந்த கடைக்காரர் சிறுமிகளிடம் அத்துமீறுவதாக பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையாகிவிட்டது. பியூலாவின் இந்த வீடியோ வைரலான நிலையில், மத போதகர் பியூலா செல்வராணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாடார் மகாஜன சபை, பல்வேறு வியாபார அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளன. புகார் குறித்து காவல்துறை விசாரித்து வரும் நிலையில், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பியூலாவை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர். இதையடுத்து சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய கிறிஸ்தவ போதகர் பியூலா மீது ஜாமீனில் வெளியே வர இயலாத 5 சட்டபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.