ஆள் பிடிக்கும் பள்ளி கல்வித் துறை

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாள் பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். அவ்வகையில் ஸ்டாலின் பங்கேற்கும் கோவை மாவட்டம் ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக மக்களை அழைத்து வர பள்ளி வாகனங்களை கொடுக்க முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை பணியா? மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும் போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா? என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.