வித்தியாசமான லவ் ஜிஹாத்

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகுல் சிங். இவர், உத்னாவின் படேல் நகரிலுள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு தற்கொலை குறிப்பு ஒன்றை எழுதி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதில் தனது இறப்பிற்கு காரணம், முஸ்லிம் மதத்தை சேர்ந்த தனது லிவ் இன் பார்ட்னர் சோனம் அலியும், அவரது சகோதரர் முக்தார் அலியும் தான். தன்னை அவர்கள் சித்ரவதை செய்தனர். மாட்டுக்கறி சாப்பிடசொல்லி வற்புறுத்தினர் என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து ராகுலின் தாயார் வீணா தேவி காவல்துறையில் புகார் அளித்தார். அதில், தனது மகன் துப்பட்டாவை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்து கவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.