புதிய பொறுப்பில் மயில்சாமி அண்ணாதுரை

இந்தியாவின் சந்திரயான் – 1 திட்டத்திற்கான இயக்குனராக இருந்த, ‘இஸ்ரோ’ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இன்னவேஷன்ஸ் நிறுவனம் மற்றும் இன்னவேஷன்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ஆகியவற்றின் இயக்குனராக இருப்பார் என, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான கதிர் பிரேம் ஸ்ரீவத்சவா கூறியதாவது: ‘இந்தியாவின் சந்திர மனிதன்’ என்று அழைக்கப்படும், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை உயர்த்திய பெருமை கொண்டவர்.

அதிநவீன பொறியியல் திட்டங்கள், ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில், புதுமையான அறிவியல் வளர்ச்சிக்கு உதவுவதுடன், நிறுவனத்தின் மதிப்பையும், வளர்ச்சியையும் உயர்த்த அவரின் இணைப்பு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.