பா.ஜ.க பார்லி., குழு இன்று அவசரமாக கூடுகிறது

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், 20ம் தேதி துவங்கியது. மணிப்பூரில் நடக்கும் வன்முறை மற்றும் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும். முழு விவாதம் நடத்த வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் பார்லி., கூட்டத் தொடர் முடங்கி வருகின்றன. இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசனை நடத்த இன்று பா.ஜ., பார்லி., குழு அவசரமாக கூடுகிறது. அப்போது, மழைக்கால கூட்டத் தொடர் தொடர்ந்து நடத்துவது குறித்து, முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முக்கியமான விஷயத்தில் நாடு உண்மையை அறிந்து கொள்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.