மேற்கு வங்கத்தில் மதமாற்றம் செய்த 7 பேர் மீது வழக்கு

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டம், கிஷ்மத் மதன்பூரைச் சேர்ந்தவர் புட்டு மண்டல். இவரது தம்பி கவுரங் மண்டல். இருவரும் அக்காள், தங்கையான பார்வதி, கலாவதி ஆகியோரை திருமணம் செய்துள்ளனர். புட்டு, கவுரங் ஆகியோர் கடந்த 2021 நவம்பர் 24ம் தேதி காணாமல் போயினர். இதுதொடர்பாக இருவரின் மனைவிகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் இருவரும் முஸ்லிம்களாக மதம் மாறியது தெரியவந்தது. இதுதொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இருவரின் மனைவிகளும் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது. இதன்படி சிபிஐ விசாரணை நடத்தி, இருவரையும் கட்டாய மதமாற்றம் செய்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.