சத்ய சாய்பாபா குறித்து பிரதமர் மோடி

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டரை பிரதமர்  நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

“ஸ்ரீ சத்ய சாயியின் ஆசீர்வாதங்களும் உத்வேகங்களும் இன்றும் நம்முடன் உள்ளன” என்று மோடி குறிப்பிட்டார்.  சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டர் என்ற பெயரில் நாடு புதிய மையத்தைப் பெறுவதற்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த புதிய மையம் ஆன்மிக அனுபவத்தையும் நவீனத்துவத்தின் சிறப்பையும் உருவாக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இது கலாச்சார பன்முகத்தன்மை கருத்தியல் மகத்துவத்தை உள்ளடக்கியது என்றும், அறிஞர்கள் நிபுணர்கள் ஒன்றுகூடும் ஆன்மிகம் மற்றும் கல்வித் திட்டங்கள் குறித்த விவாதங்களுக்கு இது ஒரு மைய புள்ளியாக மாறும். எந்தவொரு யோசனையும் செயல் வடிவில் முன்னோக்கிச் செல்லும்போது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ சத்ய சாயியின் வாழ்க்கை இதற்கு நேரடி உதாரணம் என்றார். “இன்று இந்தியாவும் தனது கடமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நகர்கிறது. சுதந்திரத்தின் நூற்றாண்டை நோக்கி நகரும் நாம் அம்ரித் காலத்துக்கு ‘கடமை’ என்று பெயரிட்டுள்ளோம். இந்த உறுதிமொழிகளில் நமது ஆன்மிக விழுமியங்களின் வழிகாட்டுதல்களும் எதிர்காலத்திற்கான தீர்மானங்களும் அடங்கும். இது விகாஸ் (வளர்ச்சி) மற்றும் விராசத் (பரம்பரை) இரண்டையும் கொண்டுள்ளது.

தொடர்ந்து பேசிய பிரதமர், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு புத்துயிர் அளித்து வரும் நிலையில், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்திலும் இந்தியா முன்னணியில் உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்கும் உலகின் முதல் 5 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இப்போது மாறியுள்ளது என்று பிரதமர் அடிக்கோடிட்டுக் கூறினார். டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் 5ஜி போன்ற துறைகளில் உலகின் முன்னணி நாடுகளுடன் இந்தியா போட்டியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகில் நடக்கும் நிகழ்நேர ஆன்லைன் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுவதாக வலியுறுத்திய பிரதமர், புட்டபர்த்தி மாவட்டம் முழுவதையும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி மாற்ற பக்தர்களை வலியுறுத்தினார். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைந்தால், ஸ்ரீசத்ய சாய்பாபாவின் அடுத்த பிறந்தநாளில் மாவட்டம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று வலியுறுத்தினார்.

ஆந்திராவின் சுமார் 40 லட்சம் மாணவர்களுக்கு ஸ்ரீ அன்ன ராகி-ஜாவாவிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவை வழங்கும் சத்ய சாய் அறக்கட்டளையின் முயற்சியை பிரதமர் பாராட்டினார். ஸ்ரீ அன்னாவின் ஆரோக்கிய நலன்களை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், இதுபோன்ற முயற்சிகளுடன் மற்ற மாநிலங்களும் இணைந்தால் நாடு பெரிதும் பயனடையும் என்று கூறினார். “ஸ்ரீ அன்னாவில் ஆரோக்கியம் இருக்கிறது, சாத்தியங்களும் உள்ளன. எங்களின் அனைத்து முயற்சிகளும் உலக அளவில் இந்தியாவின் திறனை அதிகரிக்கும், மேலும் இந்தியாவின் அடையாளத்தை வலுப்படுத்தும்” என்று கூறினார்.