சிறுபான்மையினருக்கான மிகவும் பாதுகாப்பான நாடு பாரதம்

ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான நாடாக பாரதம் உள்ளது என தெரிவித்தார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் கருத்துகள் ஏற்புடையதல்ல எனவும் கூறினார். பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது இஸ்லாமிய நாடுகளின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது என குறிப்பிட்டார். உலக மக்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்ற தத்துவத்தை பாரதம் பின்பற்றி வருவதாக தெரிவித்தார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு சர்வதேச அளவில் 13 உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது, அதில் 6 விருதுகள் இஸ்லாமிய நாடுகளால் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.