அவசர நிலையை எதிர்த்த தலைவர்களுக்கு பிரதமர் மரியாதை

நமது அரசியலமைப்புச் சட்டம் கொண்டாடும் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானதாக ஜனநாயகத்தின் இருண்ட நாட்கள் அமைந்திருந்தன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். அவசரநிலை அமல்படுத்தப்பட்ட நாளையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாகவது: “அவசர நிலையை எதிர்த்துப் போராடி, நமது ஜனநாயக உணர்வை வலுப்படுத்துவதற்காகப் பாடுபட்ட துணிச்சல் மிக்க தலைவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். ஜனநாயகத்தின் கறுப்பு நாட்கள் (#DarkDaysOfEmergency) என்பது நமது வரலாற்றில் மறக்க முடியாத காலகட்டமாக உள்ளது. நமது அரசியலமைப்புச் சட்டம் கொண்டாடும் மதிப்புகளுக்கு அது  முற்றிலும் எதிரானது.”  இவ்வாறு பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.