தமிழகத்தில் பா.ஜ., வேகமாக வளர்கிறது

கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், சுந்தராபுரம் சங்கம் வீதியில், மத்திய அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்கக் கூட்டம், மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடந்தது.

கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ”உலகெங்கும் தமிழ் மொழியை பெருமைப்பட செய்கிறார் பிரதமர் மோடி.தமிழர்கள் மீது மிகுந்த பாசமுடையவர்.’ஜி – 7′, ஐக்கிய நாடுகள் சபை என அனைத்து அமைப்புகளாலும், எதிர்பார்க்கப்படும் ஒரே தலைவர் மோடி,” என்றார்.மாநில பொதுச் செயலர் ராமசீனிவாசன் பேசுகையில், ”நாட்டின் பெருமையை மீட்டு வருபவர் பிரதமர் மோடி.அவர் மீண்டும் பிரதமராக, நாம் துணை நிற்க வேண்டும். தமிழகத்திலிருந்து செல்லும் எம்.பி.,க்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். வெள்ளலுார் குப்பையை அகற்றுவது போல, தி.மு.க.,வை அகற்ற வேண்டும்,” என்றார். மாநில இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி பேசுகையில், ”ஊழல் கட்சி, குடும்ப கட்சி தி.மு.க., இவர்களுக்கு தெரிந்தது ஜெயில், பெயில். பிரதமர் மோடி நல்லாட்சி தருகிறார்.2024ல் மூன்றாம் முறையாக பிரதமராவார். 2026ல் தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி மலரும் என்பதில் சந்தேகமில்லை.தலைவர் அண்ணாமலை தலைமையில், கட்சி வளர்ச்சி கண்டு வருகிறது. தி.மு.க.,வினர் வயிறு எரிகிறது,” என்றார்.