உத்தராகண்டில் மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் இருவர் கைது

கடந்த ஆண்டு, மாநிலத்தின் மதமாற்ற எதிர்ப்புச் சட்டத்தை வலுப்படுத்தும் வகையில், உத்தராகண்ட் சட்டசபை நவம்பர் 30 அன்று ” உத்தராகண்ட் மத சுதந்திர (திருத்தம்) சட்டம் 2022″ ஐ நிறைவேற்றியது.

உத்தராகண்ட் மாநிலம், உதம் சிங் நகரில மதமாற்றத் தடைச் சட்டத்தை மீறியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரின் பெயர்கள் விகாஸ் குமார் மற்றும் அங்கித் குமார். இருவரும் உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர்கள். இது தொடர்பாக, உத்தராகண்ட் மத சுதந்திரச் சட்டம் 2018 பிரிவு 3 மற்றும் 5ன் கீழ் கிச்சா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையின் அறிக்கையின்படி, முன்னாள் கிராம அலுவலர் பதிவு செய்த புகாரில், ஜூன் 7 அன்று, அடையாளம் தெரியாத நபர்கள் உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள கிச்சாவின் சோனேரா பெங்காலி காலனியில் வசிப்பவர்களை மதம் மாறும்படி வற்புறுத்துவதாகக் கூறினார். இதுகுறித்து கிச்சா காவல் நிலையப் பொறுப்பாளர் திரேந்திர குமார் கூறும்போது, “கிராம அலுவலர் புகாரின் பேரில், ஜூன் 10 அன்று வழக்குப் பதிவு செய்து, இருவரையும் ஒரே நாளில் கைது செய்தோம். இவர்கள் மக்களை மதமாற்றம் செய்ய தூண்டியதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எங்களின் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார். கடந்த ஆண்டு, மாநிலத்தின் மதமாற்ற எதிர்ப்புச் சட்டத்தை வலுப்படுத்தும் வகையில், உத்தராகண்ட் சட்டமன்றம் நவம்பர் 30 அன்று “உத்தரகாண்ட் மத சுதந்திர (திருத்தம்) சட்டம் 2022ஐ நிறைவேற்றியது. இச்சட்ட திருத்தத்தின் கீழ், மோசடியான மதமாற்றம் இப்போது அறியக்கூடியதாகவும் ஜாமீனில் வெளிவர முடியாததாகவும் இருக்கும். குற்றம் சாட்டப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். முன்னதாக, அதிகபட்ச தண்டனை மூன்று ஆண்டுகள் மட்டுமே. மாநிலத்தில் வலுக்கட்டாய மதமாற்றம் மற்றும் லவ் ஜிஹாத் வழக்குகள் அதிகரித்து வருவதால் இந்த திருத்தம் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில், இந்தத் திருத்தச் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  சாகிப் சைஃபி என்ற நபர் தனது அடையாளத்தை மறைத்து, ஷிவ் தாக்கூர் என்ற பெயரைப் பயன்படுத்தி ஒரு இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தார். அவர் தனது அடையாளத்தை போலியாக உருவாக்கி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார், மேலும் மதம் மாறுமாறு அழுத்தம் கொடுத்தார். அந்த நபர் உத்தரபிரதேசத்தில் உள்ள பம்பாகர் பகுதியில் வசிப்பவர். உத்தராகண்ட் மாநிலம் ராம்நகரில் சமூக ஊடகங்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவரை அந்த பெண் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சைஃபியின் உண்மை அடையாளம் அந்த பெண்ணுக்கு தெரிந்ததும், அவர் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில், நானிடால் காவல் நிலையம் சாகிப் சைஃபி மற்றும் அவரது உறவினர்களான கஜாலா, ரஹிலா, சபா மற்றும் யூனுஸ் ஆகியோர் மீது ஐபிசி மற்றும் மதச் சுதந்திரச் சட்டம், 2018 ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டது.

சமீபத்தில்  25 வயதான ஜசோதா ஷர்மா என்ற பெண், லியாகத் அலி தான்  இந்து ஆண் சமர் என்று கூறி தன்னை ஏமாற்றியதாக காவல்துறையில் புகார் அளித்தார். உத்தராகண்ட் போலீசார் அந்த நபர் மீது மத சுதந்திர சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட குடும்பத்தினர் அவளை இஸ்லாத்தை தழுவி நமாஸ் செய்ய வற்புறுத்தினார்கள், ‘மாட்டிறைச்சி’ சாப்பிட சொன்னார்கள். அவள் வீட்டில் புர்கா மற்றும் ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினார்கள் என்றார்.