பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை

கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து இலவச ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்திருந்தது.

இத்திட்டத்தின் படி தமிழ்நாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட 39 கோடி ரூபாய் மதிப்புள்ள, 250புதிய கால்நடை ஆம்புலன்ஸ்கள் , திருவள்ளூர் மாவட்டம், இருளம்பாளையம் அருகில், , ஆறு மாதங்களாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அவை மத்திய அரசின் நிதியில் வாங்கப்பட்டுள்ளன. அதில், பிரதமர் நரேந்திர மோடி படம் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக,உள்நோக்கத்துடன்  தி.மு.க., அரசு முடக்கி வைத்திருப்பது கண்டனத்திற்கு உரியது. உடனே, அனைத்து ஆம்புலன்ஸ்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

என தனது அறிக்கையில் கூறியுள்ளார்