குடியரசுத் தலைவர் வாழ்த்து

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் 2ம் கட்ட நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரின் உரை வாசிக்கப்பட்டது.இதனை நாடாளுமன்ற துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்வாசித்தார்.அதில், “நமது ஜனநாயக பயணத்தில் புதிய புதிய நாடாளுமன்ற கட்டடம் ஒரு படிக்கட்டு.இது நமது நாட்டின் லட்சியத்திற்கும், பெருமைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இது அமைகிறது.புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் திறந்து வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது என்பதை புதிய நாடாளுமன்ற கட்டடம் வெளிப்படுத்துகிறது.பாரத குடிமக்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் தருணம் இது” என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்திருந்தார்.”புதிய நாடாளுமன்ற கட்டடம் பாரதத்துக்குப் பெருமை.பாரதப் பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் இணைந்த கலவையாக புதிய நாடாளுமன்றம் உள்ளது” என துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியிருந்தார்.