பா.ஜ.க சட்டங்களை மதிப்பாய்வு செய்வோம்

கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே, “கர்நாடகாவை சொர்க்கமாக மாற்றுவோம் என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம். அமைதி சீர்குலைந்தால், அது பஜ்ரங்தளமா அல்லது வேறு எந்த சங் பரிவார அமைப்பா என்பதை நாங்கள் கருத்தில் கொள்ள மாட்டோம். யாராவது சட்டத்தை மீறினால் அவர்கள் நாட்டின் சட்டத்தின்படி நடத்தப்படுவார்கள். கடந்த நாங்கு ஆண்டுகளாக சட்டத்துக்கோ, காவல்துறைக்கோ அஞ்சாமல் சில தனி மனிதர்கள் சமூகத்தில் சுதந்திரமாக உலா வருகின்றனர். பா.ஜ.க தலைமை அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருதினால், அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம். பா.ஜ.க அரசால் நிறைவேற்றப்பட்ட பசுவதைத் தடுப்பு மற்றும் மதமாற்றத் தடைச் சட்டங்கள் உட்பட அனைத்துச் சட்டங்களையும் நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். மேலும், ஹிஜாப் உத்தரவு மற்றும் பாடப் புத்தகங்களின் திருத்தம் ஆகியவற்றையும் நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். இந்தச் சட்டங்களில் ஏதேனும் சர்ச்சைக்குரியதாகவோ, வகுப்புவாதமாகவோ அல்லது சமூகக் கட்டமைப்பு அல்லது அரசின் கொள்கைக்கு எதிராகவோ இருந்தால், அவற்றை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம்” என கூறியுள்ளார்.