கெஜ்ரிவால் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

கடந்த 2016ம் ஆண்டு பிரதமா் மோடியின் கல்வித் தகுதி குறித்த விவரங்களைக் கோரி, மத்திய தகவல் ஆணையத்துக்கு டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து பிரதமா் மோடி இளநிலை பட்டம் பெற்ற தில்லி பல்கலைக் கழகமும், முதுநிலை பட்டம் பெற்ற குஜராத் பல்கலைக் கழகமும் அவரின் கல்வித் தகுதி விவரங்களை கெஜ்ரிவாலுக்கு வழங்க வேண்டும் என்று தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இதுதொடா்பாக குஜராத் பல்கலைக் கழகம் மாநில உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது. இதனைத் தொடா்ந்து அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோருக்கு எதிராக அகமதாபாத் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குஜராத் பல்கலைக் கழக பதிவாளா் பியூஷ் படேல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை உயா் நீதிமன்றம் ரத்து செய்த பின்னா், பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ் போலியாக இருக்கலாம் என்பதால், அதுகுறித்த விவரங்களை வழங்க பல்கலைக் கழகம் மறுப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்தார். பிரதமரின் போலி பட்டப்படிப்பு சான்றிதழை உண்மையான சான்றிதழ் என பல்கலைக் கழகம் நிரூபிக்க முயற்சிப்பதாக சஞ்சய் சிங் தெரிவித்தார். இந்த அவதூறு கருத்துகளை ஊடக சந்திப்பின்போதும், டுவிட்டரிலும் அவா்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்தனா். அவா்களின் கருத்துகள் பல்கலைக் கழகத்தின் மதிப்புக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனு தொடா்பான விசாரணைக்கு மே 23ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கெஜ்ரிவால், சஞ்சய் சிங் ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, இவ்வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால், சஞ்சய் சிங் ஆகியோர் ஜூன் 7ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் புதிதாக சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.