படத்தை பாராட்டிய ஆளுநர்

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தமிழகத்தின் சில திரையரங்குகளில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது மனைவியுடன் நுங்கப்பாக்கத்தில் உள்ள திரையரங்கிற்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கு தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்தார். இந்த படத்தை பார்த்த பின் ஆளுநர் ஆர்.என். ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை பார்த்தேன். ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.