திரைப்பட உதவி இயக்குனர் மீது வழக்கு

திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி, ஏப்ரல் 30 அன்று சென்னை ராஜரத்தினம் அரங்கில் அபிராமபுரம் முத்தமிழ்பேரவை நிகழ்ச்சியில் ஹிந்து கடவுள்களான ராமர், சீதா, அனுமனை கீழ்தரமாக இழிவுபடுத்தும் வகையில் கவிதை வாசித்தார். இயோதற்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதுகுறித்து காவல்துறையில் பல்வேறு தரப்பினர் புகார் அளித்தனர். இந்த புகாரையடுத்து அவர் மீது 5 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.