பஜ்ரங்தள உறுப்பினர் மீது தாக்குதல்

பஜ்ரங் தள அமைப்பின் உறுப்பினரான அபிஷேக் என்ற 24 வயது இளைஞர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் படத்தை தனது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ஆக பகிர்ந்ததற்காக முஸ்லிம் மத வெறியர்களால் தாக்கப்பட்டார். மேலும் அபிஷேக்கை கழுத்தை அறுத்து கொல்வதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அபிஷேக், கடந்த வெள்ளிக்கிழமை தி கேரளா ஸ்டோரி படத்தை தான் பார்த்ததாகவும், படத்தின் போஸ்டர் தொடர்பாக தனது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வெளியிட்டார். மேலும், அதில் அவர் திரைப்படத்தைப் பாராட்டினார். படம் மிகவும் நன்றாக உள்ளது என்றும் இஸ்லாமிய மதமாற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டும் என்றும் பதிவிட்டார்.

இதுகுறித்து பேசிய அபிஷேக், “சனிக்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் எனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, காளி டாங்கியில் உள்ள மெர்ட்டி கேட் செல்லும் பிரதான சாலையை நெருங்கும் போது, என்னை பிந்து, அமன் மற்றும் அலி ஆகியோர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். ‘நீ ஏன் கேரளா ஸ்டோரி ஸ்டேட்டஸ்களை போட்டாய்? எங்கள் மதத்தை இழிவுபடுத்த முயற்சிக்கிறாயா?’ என கேட்டனர். ‘அதில் என்ன தவறு’ என்று விசாரித்தேன். அவர்கள் எனது அலைபேசியை பார்க்க கேட்டனர்.  அப்போது என் வீட்டிற்குள் அலைபேசி சார்ஜ் ஆகிக் கொண்டிருந்தது. நான் அவர்களை என் வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்கள் எனது நண்பர்கள் என்று என் அம்மாவிடம் தெரிவித்தேன். பின்னர் நான் அலைபேசியை வெளியே எடுத்து வந்து அவற்றைக் காட்ட ஆரம்பித்தவுடன், அவர்கள் என்னை அடிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், எனது ஸ்டேடசில் யாரையும் புண்படுத்தும் வகையில் எதுவும் இல்லை. யாருடைய மத உணர்வுகளையும் அவமதிக்க நினைக்கவில்லை. படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றுதான் பரிந்துரைத்தேன்” என கூறினார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள், ஞாயிற்றுக்கிழமை உதய் மந்திர் காவல் நிலையத்தை அடைந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். திரைப்படங்களைப் பார்ப்பது ஒவ்வொரு நபரின் உரிமை என்றும், அந்தஸ்தைப் பதிவுசெய்வதற்காக மக்களைத் தாக்குவது நியாயமில்லை என்றும் வலியுறுத்தியுள்ளனர். “எங்கள் உறுப்பினர்களில் ஒருவரை ஏதோ ஒரு வேலை என்ற சாக்குப்போக்கில் அவரது வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்து தாக்கினார்கள். அவர் சமாளித்து தப்பித்து மீண்டும் தனது வீட்டிற்குள் ஓடினார். அவர் கேரளா ஸ்டோரியின் ஸ்டேட்டசை தான் பதிவிட்டிருந்தார். அதில் எந்த ஜாதி அல்லது மதத்தைப் பற்றி இழிவுபடுத்தும் வகையிலும் பதிவிடவில்லை. அத்தகையவர்களுக்கு அவர்களின் சொந்த மொழியில் பதில் அளிக்கப்படும்” என்று வி.ஹெச்.பியின் மாவட்டச் செயலாளர் (கிழக்கு) ஜிதேந்திர சர்மா தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என காவல்துறை உதவி ஆணையர் தேராவர் சிங் தெரிவித்தார்.