காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொலை

பாரதத்தில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் கமாண்டோ படை என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவராக 1989 முதல் இருந்து வரும் பஞ்ச்வார் மீது பாரதத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பஞ்சாபின் தரண் மாவட்டத்தை சேர்ந்த இவர், பாகிஸ்தானுக்கு தப்பி ஓடினார். பின்னர் அங்கிருந்துகொண்டே, அந்நாட்டு அரசின் ஆதரவுடன் பாரதத்துக்கு எதிரான பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.எனினும், அவர் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில், பரம்ஜித் சிங் பஞ்ச்வார் நேற்று காலை 6 மணி அளவில் லாகூரில் உள்ள தனது வீட்டுக்கு அருகே தனது பாதுகாவலருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், பஞ்ச்வாரை சுட்டுக்கொன்றனர். அவரது பாதுகாவலர் இதில் படுகாயம் அடைந்தார்.