கையெழுத்து பிரச்சார இயக்கம்

ஒரே பாலின உறவுகளுக்கு திருமண அங்கீகாரம் வழங்குவது பாரத கலாச்சாரம் மற்றும் அதன் மிக ஆழமான பாரம்பரிய வாழ்வியல் மதிப்புகளுக்கு ஆழமான அடியை ஏற்படுத்தும் என நாடெங்கும் குரல்கள் ஒலித்து வருகின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் சட்ட நடைமுறையை எதிர்த்து நாடு முழுவதும் பரந்த அளவிலான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த பிரச்சாரம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் 721 இடங்களில் செய்யப்பட்டது. இரண்டே நாட்களில், மொத்தம் 1,40,374 கையெழுத்துப் பதிவுகள் மாவட்ட ஆட்சியர் மூலம் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டன. நாக்பூரைச் சேர்ந்த தேவி அஹில்யாபாய் ஸ்மாரக் சமிதி அறக்கட்டளை, உச்ச நீதிமன்றத்தில் ஒரே பாலின உறவுகளுக்கு திருமண அங்கீகாரம் வழங்குவதற்கான நீதித்துறை செயல்முறையைக் கருத்தில் கொண்டு சமூக எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த முறையீட்டிற்கு பரவலான ஆதரவை அளித்துள்ள 60 பெரிய பெண்கள் அமைப்புகள், பல்வேறு மகளிர் குழுக்கள், சிறிய மற்றும் பெரிய அளவிலான பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று சாத்தியமான ஓரினச்சேர்க்கை சட்டத்திற்கு எதிராக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த கோரிக்கை விடுத்தனர். தேவி அஹில்யாபாய் ஸ்மாரக் அறக்கட்டளையின் அழைப்பின் பேரில், டெல்லியில் உள்ள ப்ரோமோஷனல் சர்வீஸ் டிரஸ்ட் மூலம் ஒரு சர்வே நடத்தப்பட்டது, அதில் ஓரினச்சேர்க்கை உறவுகளை திருமணம் என்று அங்கீகரிப்பது பல கடினமான சூழ்நிலைகளை உருவாக்கும் மற்றும் பல்வேறு வகையான கேள்விகள் எழும், என்று 84.27 சதவீத மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.