மௌனம் காக்கும் காங்கிரஸ் தலைவர்கள்

தமிழகம் கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த காவிரி நதிநீர் பிரச்சனை, சமீபத்தில் மேகதாது அணை கட்டும் திட்டத்தால் உச்சம் தொட்டது. தமிழகத்தில் தி.மு.கவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, தமிழகத்திலும் கர்நாடகத்திலும் காவிரி நதிநீர் பிரச்சனையில் மாறுபட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. ஆகஸ்ட் 2021ல், காங்கிரஸ் கட்சி உட்பட தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் மேகதாது அணை கட்டும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த சூழலில், மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு 9,000 கோடி ஒடுக்கீடு செய்யப்படும் என அம்மாநில காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகின்றனர் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்.