பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

பா.ஜ.கவின் பட்டியல் சமூக அணி மாநில பொருளாளரான பி.பி.ஜி டி.சங்கர், கடந்த மாதம் 27ம் தேதி இரவு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் கத்தியால் வெட்டியும் கொலை செய்தது. இதை கண்டித்தும் தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறியதாகவும் கூறி தமிழகம் முழுவதும் பா.ஜ.க பட்டியல் சமூக அணி சார்பில் மே 2ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.