மாநிலத்தையே மதம் மாற்றும் அரசு

கேரளாவை இஸ்லாமிய நாடாக மாற்ற பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு முயற்சிப்பது போல தெரிகிறது. சமீபத்திய சம்பவத்தில், கோழிக்கோடு மாநகராட்சி, கேரளாவின் மலபார் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோயிலுக்கு மார்கழுதாவா எனப் பெயர் மாற்றியுள்ளது பினராயி தலைமையிலான இடதுசாரி அரசு. இந்த முடிவின் பின்னணியில் பினராயி விஜயனின் மருமகனும் பொதுப்பணித்துறை அமைச்சருமான முகமது ரியாஸ் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கோழிக்கோட்டில் உள்ள பழமையான புகழ்பெற்ற கோயில்களில் தளி கோயில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலின் கருவறையில் உள்ள லிங்கம் துவாபரயுகத்தின் இறுதியில் பகவான் பரசுராமரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. கூகுள் மேப்ஸ் உட்பட தளி கோவில் பகுதியின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூகுள் மேப்பில் தேடினால் அது மார்கழுதாவா என்று தெரிகிறது. இருப்பினும், வரலாற்று சிறப்புமிக்க தளி கோயில் பகுதியை இஸ்லாமியமயமாக்கும் இந்த முடிவு பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு சிறிதும் பிடிக்கவில்லை, அவர்கள் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மேலும், தளி கோயிலை தவிர, அங்குள்ள பிரபலமான ஜூபிலி ஹாலுக்கும் முஹம்மது அப்துரஹ்மான் சாகிப் நினைவு மண்டபம் என பெயர் மாற்றம் செய்யவும் அருகிலுள்ள பூங்காவிற்கு நௌஷத் பூங்கா என்று பெயரிடவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.