4 மாநிலங்களில் என்.ஐ.ஏ சோதனை

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் தடை விதித்தது. இந்த அமைப்பினருக்கு எதிரான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, பீகார், உத்தரப் பிரதேசம்,, பஞ்சாப், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.