பலாத்கார பாதிரிக்கு ஜாமீன்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சீரோ மலங்கரா கத்தோலிக்க சர்ச்சின் பாதிரி பெனடிக்ட் ஆண்ட்ரோ, பல பெண்களுடன் நெருங்கிப் பழகும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சூழலில், அவருக்கு நாகர்கோவில் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. பெனடிக்ட் ஆண்ட்ரோ ஒரு பாலியல் வேட்டையாடுபவர் என்று பல பெண்களால் குற்றம் சாட்டப்பட்டவர், அவர் ஆபாசமான செய்திகளை அனுப்புவார், பெண்களை தகாத முறையில் தொடுவார், முத்தமிடுவார் பின்னர் அந்த பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவேன் என்று மிரட்டி அமைதி காக்க வற்புறுத்துவார். அவர் நாம் தமிழர் கட்சியுடன் தொடர்புடையவர், அதன் தலைவர் சீமானுக்கு நெருக்கமானவர் என பல புகார்கள் எழுப்பப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.