ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் குறித்து அண்ணாமலை

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “1925ம் ஆண்டு நிறுவப்பட்ட இயக்கம், இன்னும் இரண்டு ஆண்டுகளில் 100வது ஆண்டு நிறுவன நாளை கொண்டாடவிருக்கும் இயக்கம், இந்தியா முழுவதும் அனைத்து மக்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ சேவையாற்றி வரும் இயக்கம்.பேரிடர் நேரத்தில் களத்தில் நின்று மக்கள் சேவையாற்றும் இயக்கம், யாரும் செல்ல தயங்கும் பகுதிகளுக்கு சென்று அம்மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்து தேசிய சிந்தனையை விதைத்த இயக்கம். சமத்துவத்தை முன்னிறுத்தி, நமது தேச நலன் காக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பிரம்மாண்ட பேரணி, அனைத்து தடைகளையும் ஆளும் தி.மு.கவின் அச்சுறுத்தலையும் மீறி, தமிழகத்தில் 45 இடங்களில் இன்று நடைபெறவிருக்கிறது. பாரத அன்னையின் புகழ் ஓங்குக!” என கூறியுள்ளார்.