ராகுலுக்காக அவை முடக்கம்

நாடாளுமன்ற முடக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “ராகுல் காந்திக்காக காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தொடர்ந்து இடையூறு செய்தனர். கடைசி நாளிலும் அவை நடவடிக்கைகளை சீர்குலைத்தனர். கருப்பு உடை அணிந்து மீண்டும் நாடாளுமன்றத்தை அவமதித்தனர். நாடாளுமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு எம்.பியான ராகுலுக்காக, காங்கிரசும், அவர்களின் கூட்டணிக் கட்சியினரும் என்னென்ன செய்கிறார்கள் என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. காங்கிரசும் அதன் கும்பல்களும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக சூரத் நீதிமன்றத்திற்கு எப்படி ஊர்வலமாகச் சென்றார்கள் என்பதையும் நாம் பார்த்தோம். அவர்கள் ஊர்வலம் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது” என கூறினார்.