பா.ஜ.கவின் சாதனைகளை மக்கள் அறிய வேண்டும்

பா.ஜ.க தொடக்க நாளான ஏப்ரல் 6 முதல் 14 வரை சமூக நீதி வாரமாக கடைபிடித்து, பா.ஜ.கவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கட்சியினருக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்த அண்ணாமலையின் அறிவிப்பில், “நமது கட்சியின் தொடக்கம், கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள், கட்சியின் வரலாறு, வளர்ச்சி மற்றும் இயக்கத்தை வென்றெடுத்த தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, நல்லாட்சியில் வழங்கிய சாதனைகள் ஆகியவை நமது தொண்டர்களை மட்டுமின்றி, மக்களையும் சென்றடையும் வகையில் நிகழ்ச்சிகளை கிளை அளவில் நடத்திட வேண்டும். அவ்வகையில், கட்சியின் தொடக்க நாளான ஏப்ரல் 6ம் தேதி முதல் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14ம் தேதி வரை சமூக நீதி வாரமாக கடைபிடித்து பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் மாவட்ட, மண்டல, கிளை அளவில் நடத்தப்பட்ட உள்ளது. இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க, மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் தலைமையில், மாநில செயலாளர்கள், மலர்கொடி, கே. வெங்கடேசன், ஏ. அஸ்வத்தாமன், ஓ.பி.சி பிரிவு மாநில தலைவர் ஆர்.எம். சாய் சுரேஷ், எஸ்.சி பிரிவு மாநில தலைவர் தடா பெரியசாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் என்.பி. பழனிசாமி உட்பட 10 பேர் கொண்ட மாநில அளவிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது” என கட்சியின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.