ராகுலுக்கு சாவர்க்கரின் பேரன் சவால்

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, “என் பெயர் சாவர்கர் அல்ல, என் பெயர் காந்தி. காந்தி யாரிடமும் மன்னிப்பு கேட்கமாட்டார்’ என்று கூறினார். சாவர்கர் குறித்த ராகுல்காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க, சிவசேனா உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் பல்வேறு அமைப்பினரும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மன்னிப்பு கேட்க நான் சாவர்கர் அல்ல என்று ராகுல்காந்தி கூறியதற்கு சாவர்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சாவர்கரின் பேரின் கூறுகையில், தான் சாவர்கர் இல்லை என்பதால் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று ராகுல்காந்தி கூறினார். சாவர்கர் மன்னிப்பு கேட்டதற்கான ஆதாரத்தை காட்டும்படி ராகுல்காந்திக்கு நான் சவால் விடுகிறேன். அதேவேளையில் உச்ச நீதிமன்றத்தில் ராகுல்காந்தி இரண்டு முறை மன்னிப்பு கேட்டுள்ளார். ராகுல்காந்தி செய்வது சிறுபிள்ளைதனமானது’ என கண்டித்துள்ளார்.