நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவி ஆயிஷா கல்லாஸி, ஜாதியைச் சொல்லி அவமானப்படுத்தியதாலும் அவரது மாமியார், லஞ்சமாக மூன்று லட்சம் கேட்டு மிரட்டியதாலும் அங்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த சுடலைமாடன் விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொண்டார். இந்த சூழலில், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் ம வெங்கடேசன் இதுகுறித்து விசாரனை நடத்த அங்கு சென்றார். காவல்துறையிடம் இந்த சம்பவத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தினார்.